இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (17.04) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையில்லாத வானிலை இருக்கும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply