இன்று பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (24.04) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ அதிக மழை வீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply