நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விகாரைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட, சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் பல்வேறு இடங்கள் தொடர்பில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெசெக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிககளை சந்திக்க நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply