யாழில். போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை ஆனையிறவு பொலிஸ் வீதித்தடையில் வைத்து பளை பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 5,000 ருபாய் போலி நாணயத்தாள்கள் 250, மற்றும் 500 போலி நாணயத்தாள்கள் 27 ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 24 வயதுடைய யாழ் பல்கலைக்கழக மாணவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply