‘ஜனாதிபதி போட்டியில் நிற்க தயார்’ – ஜனக ரத்நாயக்க

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முதன்முறையாகத் தெரிவித்துள்ளார்.

75 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதார நிலையை கட்டுப்படுத்தும் முன்னுதாரணத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றும் கொள்கைகளை தாம் முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய எந்தவொரு குழுவும் தன்னுடன் இணைய முடியும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மதத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply