ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இன்று (09.05) அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் இதுவரை எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.