இரத்மலானையில் கத்திக்குத்து – ஒருவர் மரணம்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலின் உரிமையாளரே இவ்வாறு கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply