6 வயதுடைய ஆண்பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது!

6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான மருத்துவமனையில் அனுமதித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குறித்த ஆண் பிள்ளையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.

தந்தையின் நண்பர்கள் இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பிள்ளைக்கு போதைப்பொருள் கொடுத்து பிள்ளையின் வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஆண் குழந்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளதுடன்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply