இலங்கையில் உள்ள ஒன்பது முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 14 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள வரியை செலுத்த தவறினால் அவற்றின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 6.2 பில்லியன் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வளவு பெரிய தொகை வரியை வசூலிக்க வேண்டியுள்ளதாக கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மொத்த நிலுவைத் தொகையான 6.2 பில்லியன் ரூபாயில், 2.5 பில்லியன் ரூபாய் வரி பாக்கியாகவும், மீதமுள்ள 3.8 பில்லியன் ரூபாய் வரி பாக்கிகளுக்கு தாமதமாக செலுத்தும் கட்டணமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த ஒன்பது நிறுவனங்களில் சில நிறுவனங்கள் கடந்த 26 ஆண்டு காலமாகவும், சில நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடகாலமாகவும் வரிசெலுத்த தவறியுள்ளதாக கலால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.