அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைக்காது -நாமல்!

நாட்டின் சுகாதாரத் துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள சர்சைகள் தொடர்பில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளிவருவது இது முதல் முறையல்ல என்பதால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சரை மாற்ற வேண்டுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply