அரிசி, பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021இல் விடுக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான தடையின் காரணமாக அரிசி மற்றும் பிற உள்ளூர் உணவுப் பயிர் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. மேலும் இதன் காரணமாக 2022 இல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 800,000 டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
எனவே, 2023ம் ஆண்டு வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டுக்கு ஓரண்டுக்கு 2.4 மில்லியன் டொன் அரிசி தேவைப்படும் நிலையில் கடந்த பெரும்போக பருவ அறுவடையின் மூலம் 2.7 மில்லியன் டொன் அரிசி உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வருடம் மீண்டும் அரிசி மற்றும் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.