கொழும்பு கோட்டையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து கரையோர ரயில் சேவையும் தாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் ஆறிவித்துள்ளது.
மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதம் கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (28.07) பிற்பகல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.