வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் தேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் விடுத்த அழைப்பின் பிரகாரம், இம்மாதம் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை இவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசியை அமைச்சர் அலி சப்ரி சந்திக்கவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.