மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (15.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையோர கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.