யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மகனின் சடலம் நேற்று (21.08) மாலை அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.