சீன ஆராய்ச்சிக் கப்பலான Shi Yan 6 இலங்கையில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள இந்திய செய்திச் சேவையான ANIயிடம் பேசியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.