இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24.10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply