இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவிக்கு எதிரான மனுவை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்க உச்ச நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் தீர்மானித்துள்ளது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற பெண் எனவும், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ அல்லது வாக்களிக்கவோ தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.
தற்போது இந்த மனு பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.