நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களிலும் வடமாகாணத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.