நாளை (19.11) நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடர் குறித்து பிரபல இந்திய தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
“இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்” அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கை இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன் , சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது.
விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு கூறியதாக இந்திய விமர்சகர்கள் தெரிவித்துள்ள போதிலும், சர்ச்சைக்குரிய கருத்தாக அமைந்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணியின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.