மன்னார் பறவைகள் கழத்தின் முதலாவது பொது நிகழ்வு விரைவில்!

இதனடிப்படையில் 02/12 2023 சனிக்கிழமை காலை 7 மணி் முதல் 9.30 மணிவரை மன்னார் கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில் பறவைகளைப் பார்வையிடுதலும் அதனைத் தொடர்ந்து காலை 10 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மன்னார் தேசிய இளைஞர் படைப்பயிற்சி நிலையத்தில் பறவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து சிறப்பித்துத் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளின் இலங்கைக்கான நுழைவாயிலாகவும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற பறவைகள் அதிகம் காணப்படும் இடமாகவும் எமது மன்னார் மாவட்டம் திகழ்கின்றது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிய கருமுதுகுக் கடற்காக்கை (Heuglin’s gull)மன்னாரில் செயற்கைக்கோள் தொழிநுட்பத்தின் மூலம் குறியிடப்பட்டு,”மேகா”என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
அது உயர்ந்த இனப்பெருக்கம் செய்யும் தனது இடமான ஆர்ட்டிக்கிலிருந்து அதிசயிக்கத்தக்க வகையில் மூன்றாவது தடவையாக இலங்கைக்கான தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

செயற்கைக் கோள் தொழிநுட்பம் மூலம் குறியிடப்பட்ட நாளிலிருந்து இது வரை “மேகா” 65,000 கி.மீ. வரை,பயணித்துள்ளது. இதுபோன்ற தனிச்சிறப்பான அம்சங்களைக் கொண்ட பறவைகளின் சரித்திரத்தை அறியவும், கொண்டாடவும் எங்களுடன் இணையுங்கள்.

மேலும் இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு, மன்னார் பறவைகள் கழகத்தின்(MBC) 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அங்கத்துவத்தினை இலவசமாகப் வழங்கவுள்ளமையால்

இந்நிகழ்வில் உங்கள் பெயர்களைப் பதிவு செய்ய, உங்கள் பெயர் மற்றும் பணிபுரியும் நிறுவனம் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை என்பவற்றை வட்ஸ்அப் செயலியினூடகக் குறுந்தகவலாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.மேலும் இது தொடர்பாக விபரங்கள் அறிவதற்கு
டிலக்சன் (076-1265041) , லஹிரு (071-4562948) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

Social Share

Leave a Reply