இன்றும் மழையுடன் கூடிய வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பைத் தாக்கிய “மிக்ஜம்” சூறாவளி நேற்று 23.30 நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 365 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்பங்களில் மக்கள் பாதுகாப்பக்க செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply