காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 382 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போர் சூழ்நிலையால் தனது மக்களுக்கு பாரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ{டனான் மோதல் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் என இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் பலஸ்தீன மோதல் 11 வாரங்களுக்கும் மேலாக தீவிரமடைந்துள்ள நிலையில் பலஸ்தீனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.