ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் இரு நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
பைசாபாத் நகரிலிருந்து 126 கிலோமீற்றர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் முதல் நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து அரை மணிநேரத்தின் பின்னர் 80 கிலோமீட்டர் ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் நில அதிர்வுகள் பதிவானதையடுத்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.