பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொள்வதனூடாக முறைப்பாடளிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.