கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் 5 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலை நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.