தொலைபேசி இலக்கத்தை முறையாக பதிவு செய்யுமாறு கோரிக்கை!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை முறையாக பதிவு செய்வது கடமை எனவும், #132# ஐ டயல் செய்வதன் மூலம் தாங்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்கள் சிம் அட்டைகள் தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்திலா பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தங்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போது, போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும், சில மூன்றாம் தரப்பினர் உரிமையானவர்களுக்கு தெரியாமல்அடையாள அட்டைகளை பயன்படுத்துவத்தால், பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply