தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்..

அரசாங்க நில அளவையாளர் சங்கத்தினர், இன்று (13) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நில அளவை செய்யும் பணியை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்தல், உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அரசாங்க நில அளவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியிருந்த போதும், நியாயமான தீர்வு வழங்கப்படவில்லை என்பதினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply