நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று (28.02) முதல் நாளை (01.03) வரை பாடசாலை மாணவர்கள் வெளிக்கள பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எந்த ஒரு பாடசாலை மாணவரும் அதிக வெயில் நேரங்களில் வெளிப்புற பயிற்சி அல்லது பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று குறித்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.