நீர்கொழும்பில் விபச்சார விடுதிகளுக்கு முற்றுப்புள்ளி – 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது

நீர்கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த 2 பெண்கள் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டதுடன் அவற்றில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

”கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமான முறையில் விபச்சார விடுதிகள் நடத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. குற்றச்சாட்டின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்”.

“இவ்வாறு நடத்தப்பட்ட 53 க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்களை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் 8 ஆண்களும் 137 பெண்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்”.

Social Share

Leave a Reply