சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லி குவாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலியும் செலுத்தினார்.
இதனையடுத்து இடம் பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்பு, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் ஒத்துழைப்பிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என இரு நாட்டு பிரதமர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.