இஸ்ரேலுக்கான விமான சேவை இடைநிறுத்தம் 

இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், உரிய நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply