விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் கணவன் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா – திஹாரிய பகுதியை சேர்ந்த இவர்கள் நீராடுவதற்காக சென்ற போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த பெண்ணிற்கு 22 வயது என்பதுடன் அவரது கணவனுக்கு 28 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணாமற்போன நபரை தேடும் முயற்சியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply