பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியினுள் பூச்சிகள் இருப்பதன் காரணமாக, குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெயாங்கொடை களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் குறித்த அரிசி தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.