சஜித் – அனுர விவாதம், திகதி அறிவிப்பு? 

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு, தேசிய மக்கள் சக்தி நேற்று(22.04) அனுப்பிய கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் மே மாதம் 7, 9, 13ம் மற்றும் 14ம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லை என்றால், உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply