இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்கள் கைது   

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்கள் கைது   இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நாகப்பட்டினம் கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply