தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வளவ கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குறித்த நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.