ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதான தாய் ஒருவரே 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார்.

தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக இன்று புதன்கிழமை (22) மட்டு போதனாவைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி கலாறஞ்ஜினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மட்டு போதனாவைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.சரவணன், தலைமையிலான வைத்திய குழாத்தினர் குறித்த பிரசவத்தினை மேற்கொள்ள சிறப்பான முறையில் செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply