24,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24,227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,954 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 5,183 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply