காணாமற்போன உயர்தர மாணவி சடலமாக கண்டெடுப்பு

கண்டி, கெல்லாபோக்க மடுல்கலைப் பகுதியில் காணாமற்போன உயர்தர மாணவி நேற்றைய தினம் (09.06) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மாணவி காணாமற் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

குறித்த மாணவி கடத்தப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவியின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக கண்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply