பணத்தை டீல் அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் – சஜித்

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும்,
பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லையென எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 251 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம்
ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை
வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22.06) இடம்பெற்றது.

போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்
இந்தப் பணத்தில் டீல் அரசியலும் கூட முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி
வைக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த அவர்,

பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது பாராளுமன்றத்திலும் வெளியிலும்
தன்மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர்.
நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள்,
சிகரெட்டை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகளையே பகிர்ர்ந்தளிக்கிறேன்.
இவை தவறான விடயங்கள் அல்ல.

ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன்
டீலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.
காலத்திற்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக
அமைந்துள்ளது.

புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன.
மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக்கொடுக்கும் அரசியல் கலாச்சாரம் இந்நாட்டில்
காலாகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றியமைப்போம்.

பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் அரசியலும்,
டீல் அரசியலும் நாட்டில் காணப்படுகிறது.

நல்ல நல்ல அரசியல் டீல்களை எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம். தமது சுய கௌரவத்துக்கு துரோகம் இழைத்து டீல் பேசும்
அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply