நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(25.06) உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு இன்று(25.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.
எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரையில் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.