பிள்ளைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்த குடும்பம்

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 02 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக நேற்று (05.07) வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது பிள்ளைகள் தலைமன்னாரிலிருந்து படகு மூலமாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து மூவரையும் விசாரணைக்காக மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

குறித்த தாயார் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும்,15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார் என்றும் விசாரணையில் தெரியந்துள்ளது.

இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் மூவரும் மெரைன் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

Social Share

Leave a Reply