ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக களமிரங்குவார் – ஐ.தே.க

ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அல்லது பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து , ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply