புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கட்டிடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணியுடன் இன்று முற்பகல் சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்தையடுத்து
அவர் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.