ஜனாதிபதிக்கு மைத்திரி கூறிய பதில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 06 வருடங்களிலிருந்து 05 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21.07) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தின் உச்ச வரம்பை ஆறிலிருந்து ஐந்து வருடங்களாகக் குறைப்பதில் ஏற்பட்ட தவறு ஜயம்பதியின் கவனக்குறைவாக இருக்கலாம் எனவும் அவர் கூறியதுடன் இதற்காக, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பும் கோரினார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையின் பிரகாரம் 19வது அரசியலமைப்பு திருத்த வரைபு வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படாது என்ற அடிப்படையிலேயே முழு திருத்தங்களும் இடம்பெற்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன நேற்று (20.07) பதலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply