குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி சாதனை புரிந்துள்ளோம் – ரணில்

குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி சாதனை புரிந்துள்ளோம் - ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இந்த பயணத்தை நிறைவு செய்து மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறையில் இன்று (16.09) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

“வளமான, சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடு வேண்டுமா அல்லது வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் தீர்மானிக்க வேண்டும். எனவே, மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லாமல் நாம் அனைவரும் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் யாரும் அரசியலைப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களை வாழவைக்க விரும்பினோம். நாட்டு மக்கள் உணவு, மருந்து இன்றி தவிக்கும் போது, எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசையில் நின்று தவிக்கும் போது சஜித்தும் அநுரவும் அவர்கள் படும் துன்பத்தை கண்டுகொள்ளவில்லை.

உலகில் பொருளாதாரம் சரிந்த ஏனைய நாடுகளைப் பார்க்கும் போது, அந்த நாடுகள் எதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஆனால், நாங்கள் அந்த சாதனையை செய்தோம். இப்போது நாம் இந்த நாட்டை 2022 ஆம் ஆண்டிலிருந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.

அம்பாறை திகாமடுல்ல பிரதேசத்தை பாரிய அபிவிருத்திக்கு கொண்டுவருவோம். மகாவலியால் கைவிடப்பட்ட பகுதிகள் விவசாயத்திற்காக திறக்கப்படுகின்றன. மேலும், மீன்பிடி தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. அதேவேளை, பானம தொடக்கம் நிலாவெளி வரையிலான அபிவிருத்தியடைந்த சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்” என உறுதியளித்தார்.

நாடு பெற்றுள்ள இந்த பொருளாதார வெற்றியை கட்சி, நிற பேதமின்றி அனைவரும் பாதுகாப்போம். அதற்கு கேஸ் சிலிண்டருக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Social Share

Leave a Reply