ஐசிசியின் ஒகஸ்ட் மாதத்திற்கான இரு விருதுகளும் இலங்கைக்கு

ஐசிசியின் ஒகஸ்ட் மாதத்திற்கான இரு விருதுகளும் இலங்கைக்கு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லாலகே மற்றும் இலங்கை மகளிர் அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோர் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்களாகச் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் மாதத்திற்கான சிறந்த வீரர்களாகத் தெரிவு செய்யப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பும்ரா மற்றும் சிமிர்த்தி மந்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்த நிலையில், துனித் வெல்லாலகே தொடரின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக ஹர்ஷிதா சமரவிக்ரம ஒகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் ஹர்ஷிதா சமரவிக்ரம சதம் கடந்திருந்தார். மகளிர் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியொன்றில் சதம் கடந்த 3வது வீரராக இவர் பதிவாகியிருந்தார்.

Social Share

Leave a Reply