காலை 6 மணி நிலவரம்: அனுர தொடர்ந்தும் முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) காலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகள் மற்றும் சில தேர்தல் தொகுதி முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்க 531,343 (52.67%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.

அவரைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச 219,835 (21.79%) வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ரணில் விக்ரமசிங்க 191,618 (18.99%) வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.  

அரியநேந்திரன் 24,768 (2.45%) வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Social Share

Leave a Reply