முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை – ருவான் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை - ருவான் விஜேவர்தன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்
என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தனியொரு நபராக சவாலை ஏற்றவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என கூறிய அவர்
அன்று அவர் சவாலை ஏற்றதால்தான் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை ஆள்வதற்குரிய அனுபவம் குறைவு என்றும் நாட்டை சரியாக வழிநடத்த முடியாமல் பொருளாதாரம் மீண்டும் சரிந்தால், அந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்நாட்டுக்கு தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply